அன்புமணி சிறந்த அமைச்சராக செயல்பட்டார்-பர்னாலா புகழாரம்
திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டார். இதன் மூலம் அவர் ஒரு சிறந்த அமைச்சர் என்பதை நிரூபித்தார் என்று தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா புகழாரம் சூட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளை நிறுவனரான, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். அவரது மனைவி சரஸ்வரதி ராமதாஸ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரியை பர்னாலா திறந்து வைத்தார்.
பின்னர் பர்னாலா பேசுகையில்,கல்வி மற்றும் சமுதாய புரட்சியை ஏற்படுத்துவதற்காக வன்னியர் கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ள டாக்டர் ராமதாசை பாராட்டுகிறேன்.
கிராமப்புற இளைஞர்களுக்கு நல்ல கல்வியை அளிப்பதன் மூலம் சமுதாய மாற்றத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வர முயலும்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது புகைக்கு எதிராக செயல்பட்டது. அவர் ஒரு மிகச் சிறந்த அமைச்சர் என்பதையே காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications