ஆர்ப்பாட்டங்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாற வேண்டிய அவசியமில்லை-ஞானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்குக் கூடும் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று சொல்ல முடியாது. அதற்கான அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் ஞானி.

மதுரையில் நடந்த அதிமுக கண்டனக் கூட்டம் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் மதுரையில் நடந்த ஜெயலலிதா தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம், அழகிரி என்ற மிகப் பெரிய பலூனில் பெரிய ஓட்டையைப் போட்டுள்ளது என்பது உண்மை.

அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிழலின் கீழ் இருந்து வரும் மதுரை மக்களின் மனதிலிருந்த மிகப் பெரிய அச்சத்தை இந்தக் கூட்டம் அகற்றி விட்டது.

மதுரையில் ஜெயலலிதா கூட்டத்துக்குக் கூடிய கூட்டம் மிகப் பெரியது, வரவேற்புக்குரியது. இருப்பினும் இந்தக் கூட்டம் அப்படியே வாக்குகளாக மாறும் என்று கூற முடியாது. வாக்கு வேறு, கூட்டம் வேறு. கூட்டம் வாக்குகளாக மாற வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஞானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+