மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரி வித்யாலாயா உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அமைத்துள்ள பள்ளிக் கட்டண நிர்ணயம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் பள்ளிகளுக்கு உங்களது மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதையடுத்து முன் அனுமதி பெறாமல் இனி எந்தக் கட்டணத்தையும் இந்தப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications