ஜெ. தலைமையில் திரண்டெழுந்திருக்கிறது மக்கள் சக்தி-வைகோ

அரியலூர் வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் உள்ள வளங்களை ஆளுங்கட்சியினர் சுருட்டி அழித்துவிட்டனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒட்டுமொத்த தமிழகத்தையே வாரி சுருட்டிக் கொள்வார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக திமுக ஆட்சியின் அவல நிலை பற்றியும், அரசுத் துறைகளில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி சட்டம் ஒழுங்கு நிலைமையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது குறித்தும் பேசினார்.
தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. அது மக்கள் சக்தியாக மாறியுள்ளது. வரும் தேர்தலில் எத்தனை கோடிகளைச் செலவிட்டாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
கடந்த அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றத்தில் திறமையான முறையில் வழக்குத் தொடர்ந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியும், கேரளத்தில் அச்சுனாந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியும் பொறுப்பேற்றன. தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் 5 தென் மாவட்டங்களில் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார் வைகோ.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications