2019 ஆசிய விளையாட்டு-இந்தியாவில் நடத்த ஒலிம்பிக் சங்கம் முயற்சி

Subscribe to Oneindia Tamil

Kalmadi
டெல்லி: 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்த, உரிமை கோரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி குழப்பத்தால் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் கண்டனத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளானது. ஆனால் போட்டிக்கு முன்பாகவே இந்த கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், காமன்வெல்த் போட்டிக்காக ஸ்டேடியங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டும், புதிதாக கட்டப்பட்டும் இருப்பதால் ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியாவில் சிறப்பாக நடத்துவது சாத்தியம் என்பதால் இந்தப் போட்டியை இந்தியாவுக்குக் கொண்டு வர ஒலிம்பிக் சங்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவது தொடர்பாக டெல்லி, ஹரியானா, உ.பி. மாநில அரசுகளுடன் பேசப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த உரிமை கோரும் நாடுகள், நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்தக் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்குமா என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+