For Daily Alerts
Just In
திருச்சி அருகே இரு பஸ்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
மணப்பாறை அருகே கல்லமேடு என்ற இடத்தில் சாலையோரமாக அரசுப் பேருந்து ஒன்று பழுதடைந்து நின்று கொண்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், இரு பேருந்துகளையும் சேர்ந்த 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் நான்கு பேர் அரசுப் பேருந்தில் இருந்தவர்கள். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
Story first published: Sunday, October 24, 2010, 12:38 [IST]