பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே, குளத்தில் குளித்த மூன்று பள்ளி மாணவிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளது ஆலவயல். இந்த பகுதியைச் சேர்ந்த பிரான் மகள் பார்வதி(10), இவர் பொன்னமராவதி அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் யோகேஸ்வரி (15), இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். துரை மகள் பாரதி(10), இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பெரிய ஊரணி குளத்தில் குளித்தனர். அப்போது, திடீரென நீரில் மூழ்கி, மூச்சுத் திணறி பரிதாமாக இறந்தனர்.
பின்பு அவர்களது உடலில் மிதந்தது. இதைக் கண்ட பொது மக்கள், பொன்னமராவதி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், குளத்தில் இறந்து போன மூன்று மாணவியரின் உடல்களை மீட்டு, பொன்னமராவதி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications