கருப்புப் பணத்தை ஒழிக்க வரிவிதிப்பில் மாற்றம் வர வேண்டும்-கி.வீரமணி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாடுகளில் போய் கருப்புப் பணத்தை குவிக்கும் செயலைத் தடுக்க, நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

சென்னையில் வருமான வரி விதிப்பு வரைவு நகல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வீரமணி பேசுகையில்,

சாதாரண ஏழை எளிய மக்களும் வரி விதிப்பு முறையை அறிந்து கொள்ளும் வகையில், வருமான வரி விதிப்பு வரைவு நகலில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் வகையிலும் வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்தால், நாட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடையும்.

இந்த கருத்தரங்களில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகள் மத்திய அரசுக்கு வருமான வரி விதிப்பு வரைவு நகலில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

கருத்தரங்கில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கமும் பேசினார். அவர் கூறுகையில், நேரடி வரிவிதிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. புதிய திருத்தங்களுடன் அடுத்த ஆண்டு முதல் வருமான வரி விதிப்பு வரைவு நகலை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+