பேசாமல் சசிகலா திமுகவுக்கு வந்து விடலாம்-திமுக பேச்சாளர் பேச்சு
பெரம்பலூர்: சசிகலா, அதிமுகவிலிருந்து விலகி பேசாமல் திமுகவுக்கு வந்து விட வேண்டும். அதன் பிறகு ஜெயலலிதா மட்டுமே அதிமுகவில் இருப்பார் என்று பேசியுள்ளார் திமுக பேச்சாளரான புதுக்கோட்டை விஜயா என்பவர்.
பெரம்பலூர் மாவட்டம் குறும்பலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் புதுக்கோட்டை விஜயா பேசுகையில்,
திமுக அரசு அறிவித்த பல திட்டங்களை அதிமுகவினர் பலர் அனுபவிக்கின்றனர். விவசாய கடன் தள்ளுபடி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கான்கீரீட் வீடு வழங்கும் திட்டம் போன்றவைகளை அதிமுகவினர் அனுபவித்தனர். ஆகையால்தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு படையெடுக்கின்றனர்.
இதைத் தடுக்க ஜெயலலிதா திருச்சி, கோவை, மதுரை என கூட்டங்களை போட்டு மக்களை கவருவதாக கூறிக்கொள்கிறார். ஆனால் திமுகவுக்கு வரும் அதிமுகவினரை அவரால் தடுக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அதிமுகவின் முன்னோடிகள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவுக்கு வர தயாராக உள்ளனர்.
இப்படியே அதிமுகவில் இருந்து அனைவரும் திமுகவுக்கு வந்துவிட்டால், அதிமுகவில் இருப்பது ஜெயலலிதாவும், சசிகலாவும்தான். சசிகலாவும் திமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளது. பிறகு ஜெயலலிதா மட்டும் அதிமுக உறுப்பினராகவும், பொதுச்செயலாளராகவும் இருக்கலாம் என்றார் விஜயா.












Click it and Unblock the Notifications