தபால் நிலையங்களில் 20 கிராம் தங்க நாணயம் அறிமுகம்: அலைமோதும் மக்கள் கூட்டம்
நெல்லை: தபால் துறை சின்னம் பொறிக்கப்பட்ட 20 கிராம் தங்க நாணய விற்பனை அனைத்து தபால் நிலையங்களிலும் தூவங்கியது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தபால் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தங்க நாணய விற்பனை அனைத்து தபால் நிலையங்களிலும் துவங்கப்பட்டது. வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்க நாணய விற்பனையை ஊக்கப்படுத்த தபால் நிலையங்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டது. இதில் நெல்லை தலைமை தபால் நிலையம் முதலிடத்தை பிடித்தது.
தபால் நிலையங்களில் 0.5 கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் ஆகிய எடைகளில் தங்க நாணயம் விற்கப்படுகிறது. இதில் தனியார் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டினர். இதையடுத்து மக்களின் நம்பிக்கையை பெறத் தபால் துறை சின்னம் தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதோடு வாடிக்கையாளர்களுக்காக 20 கிராம் எடையுள்ள தங்க நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாங்க மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தங்க நாணய விற்பனையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 10 கிராம் தங்க நாணயம் வாங்கினால் அரை கிராம் தங்க நாணயம் அல்லது 6 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்க நாணயம் வாங்க நெல்லை தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.












Click it and Unblock the Notifications