ஆர்.எஸ்.எஸ்.ஸை. தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்-காங்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவர் மீது ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளனர்.
எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும். அந்த அமைப்பின் செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து கண்காணித்து வர வேண்டியது அவசியமாகும்.
ஆர்.எஸ்.எஸ். மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பதை அரசின் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications