For Daily Alerts
Just In
அருந்ததி ராய் வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் ஆர்ப்பாட்டம்
டெல்லி: காஷ்மீர் குறித்து கருத்து கூறிய எழுத்தாளர் அருந்ததி ராயைக் கண்டித்து இன்று டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாஜக மஹிளா மோர்ச்சா தொண்டர்கள் அதன் டெல்லி பிரிவு தலைவர் ஷிகா ராய் தலைமையில் அருந்ததி ராய் வீட்டுக்குச் சென்று வீட்டுக்கு முன்பாக அருந்ததியை எதிர்த்து கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே போராட்டக்காரர்கள் இடத்தைக் காலி செய்து விட்டனர்.
இந்த திடீர் போராட்டம் காரணமாக சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இருப்பினும் விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை.
Story first published: Sunday, October 31, 2010, 16:50 [IST]