For Daily Alerts
Just In
பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் லிப்ட் அறுந்து விழுந்து 2 பேர் பலி
சென்னை: சென்னையில் உள்ள பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.
சென்னையில் அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தையும், பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலையும் இணைக்கும் வேலை நடந்து வருகிறது. இதையடுத்து லிப்ட் உள்ளிட்டவற்றை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
லிப்ட் மாற்றும் பணியின்போது திடீரென அதன் ஒயர் அறுந்து போனது. இதில் லிப்ட்டின் கீழ் சிக்கி கேரளாவைச் சேர்ந்த ஜோஸ், டோம் என்கிற தாமஸ் ஆகியோர் பலியானார்கள்.
இருவரது உடல்களையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Sunday, October 31, 2010, 17:42 [IST]