விண்ணை நோக்கி செல்லும் சமையல் எண்ணெய் விலை
நெல்லை: தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சமையல் எண்ணெய் விலை கடந்த 15 நாட்களாகவே தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசிய பொருளான சமையல் எண்ணெயின் புதிய விலை வருமாறு,
56 ரூபாயாக இருந்த தேங்காய் எண்ணெய் 80 ரூபாயாகவும், முதல்தரம் 88ல் இருந்து ரூ.92 ஆகவும், கடலை எண்ணெய் ஆந்திரா கடலை பருப்புவரத்தால் 110 ரூபாயில் இருந்து 85 ஆகவும், சன் பிளவர் ஆயில் 58 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், தவிடு எண்ணெய் 68 ரூபாயில் இருந்து 44 ரூபாயாகவும், பாமாயில் 44 ரூபாயில் இருந்து 52 ஆகவும், முதல் தர நல்லெண்ணெய் 88 லிருந்து ரூ.92 ஆகவும் உயர்ந்துள்ளது.
தங்கம் போல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடுகளில் பலகாரம் செய்வதை தவிர்த்து வெளியில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். எண்ணெய் விற்பனையும் மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications