சுபிக்ஷா மறு சீரமைப்புத் திட்டம்-நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச்
மதுரை: பெரும் பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் சுபிக்ஷா டிரேடிங் சர்வீஸ் நிறுவனத்தை, ப்ளூ கிரீன் கன்ஸ்டிரக்சன் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைக்கும் மறு சீரமைப்புத் திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் நிராகரித்துவிட்டது.
இது பொது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்த இணைப்பின் மூலம், நிதி ஆதாரங்களை பலப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார் சுபிக்ஷா நிறுவனத்தின் இயக்குநர் சுப்ரமணியன். ஆனால் இதை உயர்நீதிமன்றக் கிளை ஏற்கவில்லை.
இதுகுறித்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன், பொது நலம் கருதி இந்த இணைப்பை ஏற்க முடியாது. இதை அனுமதித்தால், அது பல லட்சம் மக்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்தை எடுத்து சிலரது நலனுக்காக கொடுப்பது போலாகி விடும் என்றார்.
தமிழகம் முழுவதும் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வந்த நிறுவனம் சுபிக்ஷா. ஆனால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத அளவுக்கு முடங்கிப் போனது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு விட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications