புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவான தினம்-வைத்திலிங்கம் தேசியக் கொடியேற்றினார்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி இன்று புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் வைத்திலிங்கம் தேசியக் கொடியேற்றி வைத்தார்.
1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியும் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
இதை அந்தந்த மாநிலங்கள் இன்று மாநிலம் பிறந்த தினமாக கொண்டாடுகின்றனர்.
1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்து, பிரெஞ்சு தேசியக் கொடி இறக்கப்பட்டு, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதை நினைவுகூறும் வகையில், இன்று புதுச்சேரி உருவாக்க தினம் கொண்டாடப்பட்டது. கோபரெட் அவென்யூவில் உள்ள காந்தி சிலை அருகே தேசதியக் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் முதல்வர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இன்றுதான் முதல் முறையாக புதுச்சேரி உருவாக்க தினத்தை புதுச்சேரி அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்ச்சியில், புதுச்சேரியை பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மீட்பதற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனர். என்சிசி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications