கல்யாணமாகி சென்றாலும் கூட பிறந்த வீட்டுடன் உள்ள உரிமை பெண்களுக்கு உண்டு-பாம்பே உயர்நீதிமன்றம்

இதுதொடர்பாக 1994ம் ஆண்டைய மகாராஷ்டிர அரசின் உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
அந்த உத்தரவில், திருமணமாகாத மகள்கள்தான், தங்களது பெற்றோர் அரசுப் பணியில்இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றால், அனுதாப அடிப்படையில் அந்தப் பணியை பெற முடியும் என கூறுகிறது.
இதை எதிர்த்து ஒருவர் பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி நிஷிதா மாத்ரே பிறப்பித்த உத்தரவில், திருமணமாகி சென்று விட்டாலும் கூட ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டில் உள்ள உரிமையும், உறவும் அற்றுப் போய் விடாது.
இந்தக் காலத்தில் போய், கல்யாணமாகி சென்று விட்டால் அத்தோடு அந்தப் பெண்ணுக்கும், பிறந்த வீட்டுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும் என்று கூறுவது விசித்திரமானது மட்டுமல்ல, அவமானகரமானதும் கூட. மகாராஷ்டிர அரசின் உத்தரவு நியாயமில்லாத ஒன்றாகும்.
கல்யாணமாகிப் போ்ய் விட்ட காரணத்தால் ஒரு பெண் எந்தக் காரணத்திற்காகவும் பிறந்த வீட்டை எதிர்பார்க்கக் கூடாது, பணே இல்லாவிட்டாலும் கூட கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும், வறுமையில் வாட வேண்டும் என்று கூற முடியாது.
கல்யாணமானாலும் கூட பிறந்த வீட்டுடன் உள்ள தொடர்பு பெண்களுக்கு அப்படியேதான் இருக்கும், அதில் மாற்றம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications