இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம்
மதுரை: நவம்பர் 3 ம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக தமிழர் உரிமைக்கான ஆஸ்திரேலியர்கள் எனும் அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
நவம்பர் 3ம் தேதி கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது இலங்கை கிரிக்கெட் அணி.
இலங்கையில் பல்லாயிறக்கணக்கான தமிழ் மக்களை இலங்கை அரசு படுகொலை செய்துள்ளதை கண்டித்து ஆஸ்திரேலியா தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது, எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தை தமிழர் உரிமைக்கான ஆஸ்திரேலியர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்துகின்றனர்.
இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் கை கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான ஆஸ்திரேலியர்கள் அமைப்பின் தலைவர் சூ பொல்ட்டன் என்பவர் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப் போராட்டத்திற்கு பல இடதுசாரி அமைப்புக்களும், தமிழ் அமைப்புக்களும் முழு ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.