தீபாவளி: பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் சுமார் 2,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகளில் பல வாரங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்டது.
இதையடுத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் மற்றும் பல்வேறு போக்குவரத்து கழகங்களும் தீபாவளிக்காக 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.
இந்தப் பேருந்துகளில் பயணிக்க முன்னதாகவே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை வாங்க சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், திருச்சி, சேலம் போன்ற நீண்ட தூரம் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பஸ்களில் ஏற பயணிகள் கூட்டம் அலை மோதியது. நேற்று மாலை முதல் விடிய விடிய பஸ் நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதே போல இன்றும் பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது.
இதே நிலை தான் ரயில்களிலும் காணப்படுகிறது. முன் பதிவு இடங்கள் எல்லாம் 3 மாதங்களுக்கு நிறைந்துவிட்ட நிலையில், சிறப்பு ரயில்களிலும் அறிவிக்கப்பட்ட நாளிலேயே இடங்கள் அனைத்தும் நிறைந்துவிட்டன.
இதனால் முன் பதிவு செய்யாத பெட்டிகளில் இடம் பிடிக்க நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தில் அலை மோதியது.
இதை சாக்காக வைத்து தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை பல மடங்காக உயர்த்திவிட்டனர்.
பட்டாசு கொண்டு செல்ல தடை:
இதற்கிடையே பட்டாசுகளை பஸ், ரயில்களில் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் சோதனை நடந்து வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications