கேரள இளைஞர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 2 கர்நாடக வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்: பெங்களூருக்கு சுற்றுலா சென்ற கேரள இளைஞர்களை மிரட்டி, பெண்களுடன் நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கர்நாடக வாலிபர்களில் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விமான நிலையம் அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கினர்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி சில பெண்களுடன் நிர்வாணமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது. அதை காட்டி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. ஊருக்கு சென்று பணம் எடுத்து தருவதாக அவர்களிடம் கூறிவிட்டு 4 பேரும் தப்பி வந்தனர். தொடர்ந்து செல்போனில் அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டி வந்தது.
இது குறித்து 4 பேரும் மலப்புரம் சங்கரன்குளம் போலீசில் புகார் செய்தனர். பணம் தருவதாகக் கூறி போலீசார் அந்த கும்பலை தந்திரமாக கேரளாவுக்கு அழைத்தனர். நேற்று மு்ன்தினம் மலப்புரம் வந்த 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மைசூர் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் மற்றும் மதிக்கேரி மாவட்டத்தைச் சேர்ந்த யாக்கூப் என தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications