தமிழகத்தில் "சட்டம்-ஒழுங்கு பிரமாதம்'' என்று பாராட்ட வேண்டுமா?-ஜெ

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களை ஒப்பிட்டு புள்ளி விவரங்களை அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிலே இதுவரை இல்லாத ஒன்றாக பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்கின்ற அளவுக்கு சட்டம்- ஒழுங்கு மோசம் அடைந்து உள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும், கோவையில் இரண்டு இளம் பிஞ்சுகள் கடத்திக்கொலை; சென்னையில் பள்ளி மாணவன் கடத்தல்; புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பிரமுகர் வெட்டிக் கொலை; ஆலங்குடி நகர திமுக செயலாளர் படுகொலை; சேலம், தாசநாயக்கன்பட்டியில் ஆறு பேர் படுகொலை;
கடலூரில் நடு ரோட்டில் மீனவர் வெட்டிப் படுகொலை; வத்திராயிருப்பு அருகே வெடிகுண்டு வீச்சு; முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் படுகொலை; பணத்திற்காக துணை நடிகை கொலை என கொலை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், "சட்டம்-ஒழுங்கு பிரமாதம்'' என்று கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications