2 திருமணம் செய்தவருடன் கல்லூரி மாணவி ஓட்டம்: போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரி: கேரளாவில் 2 முறை திருமணம் ஆனவருடன் கல்லூரி மாணவி ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொல்லம் அடுத்த பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியி்ல் பி.காம் படித்து வந்தார். பூந்துறையில் உள்ள நெடுமாங்காட்டைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கார் டிரைவராக உள்ளார்.
பிரதீப்புக்கும், கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் கல்லூரி மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாஜகான் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது பிரதீப்பும் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. பிரதீப் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பூந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் காதல் ஜோடி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் கேரள போலீசார் மற்றும் மாணவியின் உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்து தேடினர். போலீசார் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் தேடினர். ஆயினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications