சென்னை - நெல்லை இடையே வாராந்திர ஏசி ரயில்... இன்று முன்பதிவு துவக்கம்!
சென்னை: சென்னை - நெல்லை இடையே முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் குளிர்கால சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர், மயிலாடுதுறை வழியாக திருநெல்வேலிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
17-ந்தேதியிலிருந்து டிசம்பர் 15-ந்தேதி வரை வாரத்தில் புதன்கிழமை மட்டும் இந்த சிறப்பு ரயில் (எண்.06013) விடப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
திருநெல்வேலியில் வரும் 18-ந்தேதியில் இருந்து டிசம்பர் 16-ந்தேதி வரை வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் சிறப்பு ரயில் (எண்.06014) இயங்கும்.
நெல்லையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
இந்த ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் 3 -ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளாகும். சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு பயண கட்டணம் ரூ.756. எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரூ.749 கட்டணம்.
இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடு துறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கான முன்பதிவு இன்று முதல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications