For Daily Alerts
Just In
இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி: விரைவில் ஒப்பந்தம்
கொழும்பு: இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்து கொள்ளல் ஒப்பந்தத்தில் விரைவில் இரு நாடுகளும் கையெழுத்திட இருக்கிறது.
இதன் மூலம் கொழும்பில் இருந்து வரும் நீதிபதிகளுக்கு பெங்களூர் மற்றும் போபாலில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று இலங்கை நீதித்துறை அமைச்சகம் தெரிவித்தது. நேற்று இது தொடர்பாக சட்ட அமைச்சர் அதௌடா சென்விரத்னே இந்திய தூதர் அஷோக் ஏ. கந்தாவை சந்தித்துப் பேசினார்.
இந்தியா மற்றும் இலங்கையின் சட்ட திட்டம் ஆங்கிலேயர் கொண்டு வந்த ரோமன் டச் சட்டத்தை சார்ந்துள்ளது. இந்த 2 நாடுகளும் முறையே 1947, 1948 ஆகிய ஆண்டுகள் வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தன.
Comments
Story first published: Friday, November 12, 2010, 15:13 [IST]