For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாளையங்கோட்டையில் பெண் கற்பழித்துக் கொலை-3 மாதத்திற்கு பிறகு கொலையாளி கைது

Google Oneindia Tamil News

நெல்லை: பாளையங்கோட்டையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலையாளிகளில் ஒருவரை போலீசார் 3 மாதத்திற்குப் பிறகு கைது செய்தனர்.

பாளை மணக்காவலம்பிள்ளைச் நகரை சேர்ந்தவர் சுந்தரி. இவரது கணவர் இறந்து விட்டதால் ஆறுமுகம் என்பவரை 2-வது திருமணம் செய்தார். ஆறுமுகம் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். சுந்தரி கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லையில் நடந்த அரசு பொருட்காட்சி ஸ்டாலில் வேலை செய்து வந்தார்.

சுந்தரி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் கிருபா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பர்கிட்மா நகரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பைக்கில் சென்றார். கிருபா நகர் விளக்கு அருகே செல்லும்போது அவ்வழியே பைக்கில் வந்த இருவர் அவர்களை வழிமறித்தனர்.

அவர்கள் சுப்பிரமணியனை தாக்கி விட்டு சுந்தரியை வலுகட்டாயமாக தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தனர். அப்போது அவர்களுக்குள் நடந்த தகராறில் சுந்தரி கொலை செய்யப்பட்டார். பின்னர் சுந்தரியின் உடலை சீவலப்பேரி ரோடடில் உள்ள பாத்திமா கோயில் அருகே வீசிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு கொலையாளிகள் குறித்து துப்பு துலங்கியது.

திம்மராஜாபுரத்தை சேர்ந்த மருதவல்லி, வல்லிமுருகன் ஆகியோர் சுந்தரியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. மருதவல்லியை போலீசார் கைது செய்தனர். வள்ளிமுருகனை தேடி வருகின்றனர்.

வள்ளிமுருகன் சொந்தமாக ஆட்டோ, வேன் வைத்துள்ளார். கைதான மருதவல்லி, வள்ளிமுருகனிடம் வேன் டிரைவராக இருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X