பீகாரில் நடந்த சாலை விபத்தில் 4 தமிழக யாத்ரீகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பபுவா (பீகார்): பீகார் மாநிலம் புத்தகயா அருகே நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள். நான்கு பேர் படுகாயமடைந்தனர். இன்றுகாலை இந்த விபத்து நடந்தது.
இறந்த நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்த கோபிநாத் நாயர், பி.கே.நாயக், சுபாஷினி, ராமச்சந்திரா என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் உள்ளிட்ட சிலர் மினி பஸ் மூலம் புத்தகயா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பபுவா மாவட்டம் குசைலா கிராமத்தில் பஸ் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் மேற்கண்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த நான்கு பேரும் வாரணாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications