For Daily Alerts
Just In
சென்னையில் நரேந்திர மோடி-வேலூர் தங்க கோவிலுக்கு விஜயம்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார். இதையடுத்து அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இன்று காலை 11 மணிக்கு குஜராத் மற்றும் தமிழ்நாடு தொழில் அதிபர்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக மோடி வந்துள்ளார்.
இதை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் அவர் ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை சென்னை திரும்பும் அவர் விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
Comments
Story first published: Saturday, November 13, 2010, 12:42 [IST]