For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்கில் வீரர்கள் பட்டியலிலும் போலி: ஆதர்ஷ் ஊழலில் அடுத்த ஷாக்!

By Chakra
Google Oneindia Tamil News

Adarsh Housing Scam
மும்பை: மும்பையில் கார்கில் வீரர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை, கார்கில் வீரர்களுக்குப் பதில் பொதுமக்களுக்கும் சாதாரண ராணுவ வீரர்களுக்கும் ஒதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்கில் வீரர்கள் என்ற பெயில் வெளியிடப்பட்ட பட்டியலே போலி என்றும், அதில் கார்கில் வீரர்கள் என்ற பெயரில் சாதாரண பொதுமக்கள் பெயர்களும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

கார்கில் வீரர்களுக்கு மும்பையில் 31 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் பிரிவு வாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒதுக்கி வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 71 பெயர் இருந்தது. இதில் 34 பேர் பொது மக்கள், 29 பேர் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், 8 பேர் ராணுவ தளபதிகள் ஆவர்.

இந்தப் பட்டியலில் கார்கிலுக்கு சம்பந்தமில்லாத ராணுவ வீரர்களையும் கார்கில் தியாகிகள் என்று குறிபிட்டு வீடு ஒதுக்கியுள்ளனர்.

மேலும், போலி பெயர்களிலும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உயர் வீடுகள் பிரிவில் மேஜர் ராஜீவ்குமார், அசேலால் தாகூர் ஆகியோருக்கு கார்கில் வீரர்கள் பிரிவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விந்தை என்னவென்றால் இவ்விருவரும் கார்கில் போரில் கலந்து கொள்ளவேவில்லை. இது குறித்து விசாரணை நடத்தினால் இன்னும் பல போலி பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X