மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக போராடும் தந்தை-நினைவு நாளில் உண்ணாவிரதம்
திருவனந்தபுரம்: தனது மகள் கற்பழித்துக் கொல்லப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்காததால் தந்தை தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளியனூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் மகள் சாரி. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சாரி மர்ம நபர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 6 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குற்றவாளிகளை பிடித்தபாடில்லை.
சாரி கொலை செய்யப்பட்டபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் இந்த கொடூரக் கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என்றும் போராட்டம் நடத்தினார்.
தற்போது அவர் ஆட்சிக்கு வந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே, சுரேந்திரன் அச்சுதானந்தனின் ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அங்கு தனது மகளின் புகைப்படத்தையும் வைத்திருந்தார்.
அவரைப் போலீசார் அப்புறப்படுத்த முயன்றும் மகளுக்கு நீதி கேட்டு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவர் தனது மகளின் ஒவ்வொரு நினைவு நாளன்றும் நீதி கேட்டு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications