For Daily Alerts
Just In
டெல்லியில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி கைது
டெல்லி: தலைநகர் டெல்லியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
தெற்கு டெல்லி டீர் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு சிறப்பு அதிரடிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதியை சரண் அடையும்படி கூறினர். ஆனால் அவன் மறுத்ததோடு தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினான்.
உடனே போலீசார் பதில் தாக்குதல் நடத்தி அவனை சரண் அடையச் செய்தனர். விசாரணையில் அவன் பெயர் அப்துல்லா இன்குலாபி என்றும், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர் என்றும் தெரிய வந்தது.
Comments
Story first published: Monday, November 15, 2010, 13:11 [IST]