குண்டு துளைக்கப்பட்ட இத்தாலிய படகு-கொளச்சல் அருகே பிடிபட்டது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கொளச்சல் அருகே துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட இத்தாலிய படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதை தீவிரவாதிகள் உபயோகப்படுத்தினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் க்யூ பிரிவு போலீசார் இந்தப் படகைப் பறிமுதல் செய்தனர். இதை கொளச்சலைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தான் கரைக்கு கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அவரிடம் விசாரித்ததில் அந்த ஆளில்லா படகு கன்னியாகுமரி கடலில் இருந்து 60 மைல் தூரத்தில் மிதந்ததாகவும், அதை தான் கரைக்கு கொண்டு வந்ததாகவும் கூறினார். இந்த தகவலை மீன்வளத் துறை துணை இயக்குநர் ஐசக் தெரிவித்தார்.

அந்த படகை குண்டுகள் துளைத்துள்ளன. அதனால் அதை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+