உத்தர பிரதேசத்தில் முன்னாள் காங். எம்.பி சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அமன்பால் சிங் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அமன்பால் சிங். இவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் எம்.பி.-ஆகவும் பணியாற்றியுள்ளார்.

நேற்று அவர் மேரூத் மாவட்டம் மவானா அதுரா ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கையில் அவர் கார் மீது இன்னொரு கார் மோதியது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கி வந்த நபர் சிங்கையும், அவரது டிரைவரையும் நோக்கி சுடத் தொடங்கினார். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. மகேஷ்வரி தெரிவித்தார்.

அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஙகு அமன்பால் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீருட்டில் உள்ள மவான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+