அயோத்தி நிலம்-சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு அப்பீல்
டெல்லி: அயோத்தி நில வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோவில் கட்ட ஒரு பகுதியையும், பாபர் மசூதி கமிட்டியிடம் இன்னொரு பகுதியையும், நிர்மோகி அகாரா இந்து அமைப்புக்கு மூன்றாவது பகுதியையும் வழங்க வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜமியத் உலாமா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று அப்பீல் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவி்ல், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், நம்பிக்கைகளின் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சாட்சியங்கள், ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனைக்குரிய நிலத்தை 3 பங்காக பிரித்து வழங்கச் சொல்லி இருப்பது தவறானது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications