For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெலிகாம் துறையில் ரூ.33,957 கோடி அந்நிய முதலீடு!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் ரூ.33,957 கோடி அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளதாக துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.

மக்களவையில் எழுத்து மூலமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2007-08-ம் நிதியாண்டில் ரூ.5,103 கோடியும் 2008-09-ம் நிதியாண்டில் ரூ.11,727 கோடியும் 2009-10 நிதியாண்டில் ரூ.12,338 கோடியும் 2010 ஆகஸ்ட் வரை ரூ.4,789 கோடியும் அந்நிய முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வழங்கப்பட்ட பிளாக்பெர்ரி செல்போன் இணைப்பு 10 கோடியே 33 லட்சம் ஆகும்.

மத்திய கண்காணிப்பு முறை விரைவில் செயல்படுத்தப்படும். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தொலைத் தொடர்பை பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்றார். இதன் மூலம் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் தொலைபேசி அழைப்புகளை இடைமறித்து கேட்க முடியும்", என்றார் சச்சின் பைலட

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X