For Daily Alerts
Just In
மருத்துவமனையில் பொன்சேகா திடீர் அனுமதி
கொழும்பு: வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று திடீரென சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களை படுகொலை செய்தது தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
சரத் பொன்சேகாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.
ராணுவத்துக்கு ஆயுத தளவாடங்கள் வாங்கிய வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் பொன்சேகா.
Story first published: Wednesday, November 17, 2010, 16:12 [IST]