For Daily Alerts
Just In
வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பில் வீடு-இலங்கை அரசு ஒதுக்கியது
கொழும்பு: இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்திருந்த, இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை இலங்கை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வீடு மிக ஆடம்பரமான, சகல வசதிகளும் நிறைந்தது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும், அதற்கு இலங்கை அரசு அளித்த வெகுமதிதான் இந்த வீடு என்றும் கூறப்படுகிறது.
Comments
Story first published: Wednesday, November 17, 2010, 9:34 [IST]