தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்ட சதி நடக்கிறது-வைகோ

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கடந்த 17-ம் தேதி பாமக நிர்வாகி ராஜ்குமார் மீது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லாத வேறு இருபிரிவினருக்குச் சொந்தமான கமுதி பஜாரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளன. மொத்தத்தில் கமுதி பகுதியில் பல தரப்பினரிடமும் பதற்றம் நிலவுகிறது.
தலித் மக்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கி அரசியல் அறுவடை செய்ய முயற்சிகள் நடைபெறுவது கவலை தருகிறது.
எனவே, தென் மாவட்ட மக்கள் எந்தவித ஜாதி மோதலுக்கும் இடம் தராமல் அமைதியை நிலைநாட்ட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications