ஜெகன் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை-காங். முடிவு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸை விமர்சித்து ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சாக்ஷி டிவி செய்தி வெளியிட்ட விவகாரத்தில் இப்போதைக்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாம்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ரோசய்யாவை டெல்லிக்கு அழைத்திருந்தது கட்சி மேலிடம். இதையடுத்து அவர் இன்று டெல்லி விரைந்தார். அவர் சட்ட அமைச்சரும், ஆந்திர மாநில விவகாரத்தை கவனிப்பவரும், சாக்ஷி டிவி செய்தி தொடர்பாக விசாரிக்குமாறு சோனியாவால் உத்தரவிடப்பட்டுள்ளவருமான வீரப்ப மொய்லியுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், அகமது படேல்ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தின்போது, ஆந்திர சட்டசபையின் குளிர்காலக்கூட்டத் தொடர் முடியும்வரை ஜெகன் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ரோசய்யா சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications