முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்,
பிளாட்பார கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வசர் கருணாநிதியின் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டிவிட்டு இணைப்பை து்ண்டித்தார்.
அவர் போதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல மைலாப்பூர் துணை கமிஷனர் பெரியய்யா தலைமையில் தனிப்படை போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் பேசிய செல்போனின் முகவரி, மதுரை அருகில் உள்ள முகவரியாக இருந்தது. ஆனால், அங்கு போலீசார் விசாரித்த போது, அது போலி முகவரி என்று தெரிய வந்தது.
அந்த நபர் சென்னையில் இருந்துதான் பேசியுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. விரைவிலேயே அவர் பிடிபடுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications