செல்போன்-தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத் தகவல்களை லீக் செய்து சிக்கிய உள்துறை அதிகாரி

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார் இவர். இவரது வீட்டை நேற்று டெல்லி போலீஸார் சோதனையிட்டனர்.மேலும் அவரது அலுவலகத்தையும் சோதனையிட்டனர்.
அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்னர்.
தனியார் நிறுவனங்களுக்கு பல முக்கியத் தகவல்களை இவர் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வணிக நோக்கில் இவற்றை அவர் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நக்சலைட்களுக்கு
அதேசமயம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் இவர் செயல்படவில்லை என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் யு.கே.பன்சால் தெரிவித்துள்ளார். அதேசமயம், உயர் மட்டப் பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு தகவல்களை வெளியிட்டது கவலை தரும் அம்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழலை எந்த கட்டத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை டெல்லி போலீஸார், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கவுள்ளனர் என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டார் சிங். பிளாக்பெர்ரி பிரச்சினை தொடர்பான முக்கிய விஷயங்களை இவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் பிளாக்பெர்ரி தயாரிப்பாளர்களுக்கு சிங் முக்கியத் தகவல்களை அளித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications