தொடரும் பேய் மழை-தத்தளிக்கும் மதுரை-பல பகுதிகளில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

Satellite View Nov 23
மதுரை: மதுரை மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் இரவு நேர கன மழையால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்மாய்கள் உடைப்பெடுத்துள்ளன.

மதுரை நகரி்ல் உள்ள வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடி வருகிறது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மதுரை நகரில் கடந்த சில தினங்களாக வட கிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில்தான் கன மழை பெய்து வருகிறது.

இந்த தொடர் பேய்மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளன.

எல்லீஸ் நகர், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. வெள்ள நீர் சேகரமாகும் நீர்நிலைகள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், வெள்ள நீர் வடிய இடம் இல்லாமல் தேங்கியுள்ளது. அதனால் வெள்ள நீரை வெளியேற்ற வழி தெரியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் நிர்வாகம் இரவு முதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்மாய் உடைந்தது:

வடபழஞ்சி விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நடவு நாற்றங்கால்கள் நாசம் அடைந்துள்ளன.

வெள்ள நீர் அதிகரித்து, மதுரை தணக்கன்குளம் கண்மாய் உடைந்தது. உடைப்பெடுத்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் மக்களும் மாநகராட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் பத்து ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் இருந்த குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதேபோல உசிலம்பட்டி பகுதியிலும் கண்மாய் உடைந்து 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ள நீர் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ளதால், மதுரை நகரின் பெரும்பாலான சாலைகளும் மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் சாலைப் பள்ளங்களால் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.

வைகையில் வெள்ளம்-ரசிக்கக் குவிந்த மக்கள்:

மதுரையில், கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால்தான் வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதைப் பார்க்க முடியும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேய் மழை காரணமாக வைகை ஆற்றில்வெள்ளம் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க மக்கள் இரு கரைப் பகுதிகளிலும் கூடி நின்று ரசித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+