பஞ்சாயத்து ஊழியர் தற்கொலையில் திடீர் திருப்பம்: ஊராட்சி உதவியாளர்களுக்கு ஆதரவாக கலெக்டரிடம் மனு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலபேரி மக்கள் நல பணியாளர் அருமைராஜுக்கு எதிராக ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலபேரி பஞ்சாயத்தில் மக்கள் நலப் பணியாளராக பணியாற்றிய அருமைராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் தனது தற்கொலைக்கு பஞ்சாயத்து தலைவர் ஜான், உதவியாளர் நவநீதிகிருஷ்ணன் ஆகியோ்ர் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அருமைராஜ் தற்கொலைக்கு ஊராட்சி மன்ற உதவியாளர் காரணமல்ல எனக் கூறி நெல்லை மாவட்ட ஊராட்சி உதவியாளர் சங்கத் தலைவர் தயாளன் தலைமையிலான உதவியாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வராதவர்களின் பெயர்களை போலியாக அருமைராஜ் பதிவு செய்துள்ளார். இதை கடந்த 9-ம் தேதி ஊதியம் வழங்கும்போது ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உதவியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அருமைராஜிடம் விசாரித்தபோது அவர் தனது தவறை ஒப்புக் கொண்டு இனிமேல் தவறு செய்யமாட்டேன் எனக் கடந்த 10-ம் தேதி ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். இதன்பிறகு தான் அவர் தற்கொலை செய்துள்ளார்.

அவரது தற்கொலைக்கு ஊராட்சி உதவியாளர் காரணமாக இருக்க முடியாது. எனவே துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவுடன் தற்கொலை செய்த அருமைராஜ் எழுதிய ஒப்புதல் கடித்ததையும் அவர்கள் இணைத்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+