தூத்துக்குடியில் தூதுவளை மி்ட்டாய் சாப்பிட்ட 2 குழந்தைகள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட 2 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.

தூத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகள் ராமலெட்சுமி. இவர் கடந்த 18-ம் தேதி மயங்கிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த ஜான்சன் மகள் ரினோசாவும் மயங்கிய நிலையில் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார்.

இரு குழந்தைகளும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டதை அறிந்த டாக்டர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அதில் குழந்தைகள் சின்னகன்னிபுரத்தில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் தூதுவளை மி்ட்டாய் வாங்கி சாப்பிட்டதாகத் தெரிவித்தனர்.

கடந்த வாரம் ராமலெட்சுமியின் சகோதரியும் தூதுவளை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுந்ததாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்றுச் சென்றார். மாணவிகள் யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் தூதுவளை மிட்டாய் குறித்து விசாரிக்க வேண்டுமென்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளி மாணவ-மாணவிகள் தூதுவளை மிட்டாய் வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுவது அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+