For Daily Alerts
Just In
இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டை மிஞ்சும்: அமெரிக்கா கணிப்பு
டெல்லி: 2010-11ம் ஆண்டு இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டின் 2.7 லட்சம் டன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு சவாலாக இருக்கும்போதிலும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அமெரிக்க விவசாயத் துறை (யுஎஸ்டிஏ) அறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து யுஎஸ்டிஏவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்தியாவில் காபி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 2009-10 பயிர் ஆண்டை விட இந்த ஆண்டு காபி ஏற்றுமதி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ஒரு காபி சாகுபடி ஆண்டு (பயிர் ஆண்டு) ஆகும்.
தற்போதைய பயிர் ஆண்டின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டுபோல் அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, November 26, 2010, 17:38 [IST]