இரட்டை கொலை வழக்கில் ஜப்பான் சிறுவனுக்கு மரண தண்டனை: அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் தனது சகோதரியையும், காதலியையும் இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொன்ற 19 வயது சிறுவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜப்பானில் 19 வயது வரையிலான குற்றவாளிகளை சிறுவர்கள் என்றே அழைக்கின்றனர். அத்தகைய 19 வயது சிறுவன் ஒருவன் தனது உடன் பிறந்த சகோதரியையும், காதலியையும் ஈவு இரக்கமின்றி கத்தியால் குத்திக் கொன்றுள்ளான். இந்தக் கொடுமையைத் தடுக்க வந்த நபருக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஆனால் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் நடந்தது.

இது தொடர்பான வழக்கு மியாகி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நம் நாட்டில் நீதிபதிகள் இருப்பதுபோன்று ஜப்பானில் நடுவர்கள்(ஜுரி) உள்ளனர். நீதிபதிகளுக்குப் பதிலாக நடுவர்கள் (ஜுரி) வழக்கை விசாரிக்கும் முறை அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கு 6 நடுவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள் சிறுவனை சாகும் வரை தூக்கிலிடுமாறு தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+