5 நிமிடத்தில் நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் பேசி விடுகிறோம்-ப.சிதம்பரம் வேதனை

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த சி.சுப்ரமணியம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பேசுகையில், நாடாளுமன்றம் தினசரி காலை 11 மணி்க்குக்கூடுகிறது. 11.05 மணிக்கு முடிந்து விடுகிறது. நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஐந்தே நிமிடத்தில் பேசி முடித்து விடுகிறோம். எல்லாப் பிரச்சினைகளையும் நாம் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய நாடாளுமன்ற சூழல்.
இந்த நேரத்தில் 60களில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியத்திற்கும், திமுக தலைவர் அண்ணாதுரைக்கும் இடையே தமிழக சட்டசபையில் நடந்த விவாதங்கள் எனது நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் மூன்று தமிழர்கள். அவர்கள் சி.சுப்ரமணியம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், விவசாயத்துறை செயலாளராக இருந்த சிவராமன். இந்த மூன்று பேரும்தான் இந்தியாலின் பசுமைப் புரட்சியின் நாயகர்கள்.
நேரு அமைச்சரவையிலும், இந்திரா காந்தி அமைச்சரவையிலும் முக்கியப் பதவிகளை வகித்தவர் சி.சுப்ரமணியம். மிகச் சிறந்த தலைவர்களில் அவருக்கும் முக்கிய இடம் உண்டு. மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியும் கூட.
70களில் நம்மிடம் கோதுமை இல்லை. அதை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். அந்தக் கோதுமையை சமைத்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் கெட்டுப் போய் விடும். ஆனால் இன்று நமது கிட்டங்கிகளில் கோதுமை நிரம்பி வழிகிறது. இருப்பு வைக்க கிட்டங்கிகளுக்குப் பற்றாக்குறை உள்ளது. இதற்குக் காரணம் இந்த மூன்று தமிழர்களும்தான்.
இந்தியாவை வளமைப்படுத்திய இந்த மூன்று எஸ்களும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தரக் கூடியதாகும்.
தமிழ் மொழி மீது அளப்பறிய பற்று கொண்டிருந்தவர் சி.சு. தமிழ்நாடு என்ற பெயர் வர அவரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இன்று இந்தப் பெருமைக்கு சிலர் உரிமை கொண்டாடலாம். பலர் அதை மறந்து கூட போயிருக்கலாம். ஆனால் தமிழுக்கும், தமிழ்நாடு என்ற பெயர் வந்ததற்கும் சி.சு ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
அதேபோல பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் கல்வி அமைச்சராக இருந்த சி.சு., இந்தியாவின் முதல் மதியஉணவுத் திட்டத்தை வெற்றிகரமாக அமலாக்க பெரும் பங்காற்றினார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications