தலித் பெயரைப் பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்ப முயற்சிக்கிறார் கருணாநிதி-வைகோ
சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை தலித் பிரச்சினையாக்கி, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உத்தமத் தலைவராக இருந்த காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் இருந்தபோதும், வாழ்ந்தபோதும் பொது வாழ்க்கையில் தூய்மையை கட்டிக்காத்து வந்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கியதற்கு முழு காரணம் கருணாநிதிதான். ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கு என்ன என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.
நிரா ராடியா, கனிமொழி உரையாடல்களை பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதை கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்புவதற்காக ஆரியம், திராவிடம் என கருணாநிதி பேசுகிறார். இது மக்களிடம் எடுபடாது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு பிரச்சனையை தலித் பிரச்சனையாக திசை திருப்புகிறார். ஸ்டெக்ட்ரம் ஊழலால் தி.மு.க. வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. வை மொத்தமாக குறை சொல்லமாட்டேன். தி.மு.க. வுக்காக தங்கள் சொத்துக்களை விற்று கட்சியை வளர்த்த தொண்டர்கள் உள்ளனர்.
மதுரையில் நடந்த தனது பேரன் திருமண விழாவில் மணமக்களை, தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி போல வாழ வேண்டும் என கருணாநிதி வாழ்த்தினார். இப்படி பேசி 10 நாள் கூட ஆகவில்லை. அதற்குள் தற்போது காங்கிரஸ் கூட்டணி பற்றி ஏதோதோ பேசுகிறார்.
கருணாநிதிக்கு தன் குடும்பம், மக்களிடம் நிறைய பயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications