திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தைப் நடமாட்டம்: பக்தர்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

திருமலை: திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இல்லையென்று நிம்மதி பெருமூச்சுவிட்ட பக்தர்கள் தற்போது பீதி அடைந்துள்ளனர்.

திருப்பதி மலைப்பாதையில் கடந்த 2 மாதத்திற்கு முன் தான் 2 புலிகள் மாறி மாறி பக்தர்களை பயமுறுத்தி வந்தன. பின்னர் அவற்றை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் விட்டனர். இந்நிலையில் அங்கு மீண்டும் சிறுத்தை ஒன்று நடமாடியிருக்கிறது.

பக்தர்களின் வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றுள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் தற்போது பக்தர்கள் எந்த நேரம் வருமோ என்ற பயத்தில் உள்ளனர்.

ஏற்கனவே அங்கு 2 சிறுத்தைள் நடமாடியதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல தடைவிதித்திருந்தது. பிரமோற்சவம் முடிந்த பிறகுதான் மீண்டும் மலைப்பாதை வழியாக நடக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து செல்வதை தவிர்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+