ஈரோடு அருகே சிறுத்தையை விஷம் வைத்து கொன்ற 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சிறுத்தையை விஷம் வைத்து கொன்றதற்காக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் திம்பம் வனப் பகுதிக்குட்பட்ட கீர்மலம் வனப்பகுதியில் நேற்று 4 வயது சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசாமி, பொரியமதன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அந்த சிறுத்தை கடந்த சில தினங்களுக்கு முன் வயலில் புல் மேய்ந்து கொண்டிருந்த அவர்களது மாடுகளையும், எருதுகளையும் கொன்றதாகவும், அதற்காகத் தான் அதற்கு விஷம் வைத்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications