ஆண்டிப்பட்டி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்-17 பேர் பலி: 90 பேர் படுகாயம்
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே நேற்றிரவு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 17 பேர் பலியாயினர். மேலும் 90 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நேற்றிரவு மதுரை நோக்கி தனியார் பஸ் சென்றது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து போடி நோக்கி இன்னொரு தனியார் பஸ் சென்றது.
இந்த பஸ்கள் இரவு 8 மணியளவில் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் விலக்கு என்ற இடத்தில் பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் திருமங்கலத்திலிருந்து வந்த பஸ், சின்னமனூர் பேருந்துக்கள் பாதி வரை புகுந்துவி்ட்டு, பின்னர் 100 அடி தூரம் வரை சென்று கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் 14 பேர் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டனர். சம்பவம் அறிந்து தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 5 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், இரு சிறுவர், சிறுமிகள் அடங்குவர்.
காயமடைந்து மீட்கப்பட்ட 90 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications